வேலூரை அடுத்த பாகாயத்தில் இருந்து மேட்டு இடையம்பட்டி கிராமத்துக்கு செல்லும் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாகாயம், எம்.ஜி.ஆர்.நகர், வளர்நகர், என்.கே.நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 6 மாத காலமாக ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி இன்னும் முடியயவில்லை. சிமெண்டு சாலை அமைக்காத இடங்களில் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
-சுரேஷ், பாகாயம்.