சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-04-26 16:45 GMT


நெமிலி தாலுகா, ஒச்சேரியில் இருந்து உத்திரம்பட்டு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் உத்திரம்பட்டு கிராமத்திலிருந்து பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக ஆயர்பாடி பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ- மாணவிகள் நிலை தடுமாறி கிழே விழுவது வாடிக்கையாக நடைபெற்றுவருகிறது. உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்