வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட எழில்நகர், விருபாட்சிபுரம், பாலவன்சாத்துக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், சாலை அமைக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், தற்போது பல இடங்களில் ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ஒரு இடத்தில் சாலைகள் தோண்டப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய், கழிவுநீர், மின்சாரம் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டாலும், பணிகள் முடிந்த பிறகு அவை முறையாக மூடப்படுவதில்லை. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் மீண்டும் குண்டும் குழியுமாகி, பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சாலை தோண்டப்பட்ட இடங்களில் பணிகள் முடிந்தவுடன், ஏற்கனவே இருந்த தரத்திலேயே சாலையை முறையாக சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்குமார், வேலூர்.