காட்பாடி-திருவலம் சாலையில் பவானிநகர் பகுதியில் குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டினார்கள். பல நாட்கள் ஆகியும் தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. இதனால் ஆற்காடு, ராணிப்பேட்டை, காட்பாடி வரும் வாகனங்கள், வி.ஐ.டி.யில் இருந்து வரும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தோண்டிய பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சிவக்குமார், முத்தமிழ்நகர். காட்பாடி.