வேலூர் தோட்டபாளையத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. இங்குள்ள பல்வேறு தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். மழைநேரங்களில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீடுகளுக்குள் வருகிறது. அனைத்து தெருக்களையும் சீரமைத்து, சாலை அமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயையும் தூர்வார வேண்டும்.