வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2024-06-02 12:41 GMT

திருவண்ணாமலை மாவட்டம் மேல்சீசமங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் நகர் அருகில் ஆரணி-வாழைப்பந்தல் சாலை உள்ளது. அந்தச் சாலையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை நிறம் வர்ணம் பூசப்படாமலும், எச்சரிக்கை பலகை அமைக்காமலும் உள்ளது. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்குகிறார்கள். அப்பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக்க வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜெயகுமார், மேல் சீசமங்கலம்.

மேலும் செய்திகள்