வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-06-07 17:14 GMT

வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் தாராபுரம் சாலையில் அதிகளவில் இருசக்கர, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. இந்த சாலையில் இருந்து கே.எஸ்.சி. அரசு பள்ளிக்கு திரும்பும் சாலை சந்திப்பு பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வெளியேறுவதுடன், சாலையும் மிகவும் சேதம் அடைந்து வருகிறது. பலமுறை சாலையை சீரமைத்தும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சாலையையும் சீரமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனந்தன், திருப்பூர்.

மேலும் செய்திகள்