தார்ச்சாலை அமைப்பது எப்போது?

Update: 2023-11-19 17:05 GMT

தார்ச்சாலை அமைப்பது எப்போது?

திருப்பூர் மாநகர பகுதியான புதிய பஸ் நிலையம் அருகில் குமாரசாமி நகர் கிழக்கு, பி.என்.சாலை, பிச்சாம்பாளையம் பகுதியில் உள்ள சாலை நீண்ட காலமாக மண்சாலையாகவே உள்ளது. இந்த சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்றுவருகின்றன. மண்சாலை என்பதுடன் குண்டும்குழியுமாக சாலை உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். அதிலும் மழைக்காலம் வந்தால் சாலையின் அவலத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்ைக எடுப்பார்களா?

குப்புசாமி, திருப்பூர்.

மேலும் செய்திகள்