விபத்தை ஏற்படுத்தும் குழிகள்

Update: 2023-01-29 16:47 GMT

விபத்தை ஏற்படுத்தும் குழிகள்

 திருப்பூர் மாநகரில் பெரும்பாலான சாலைகள் அகலம் குறைவாகி குறுகியதாகவே உள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறுகிய சாலைகளில் ஆங்காங்கே குழிகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் விழுந்து காயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அந்தவகையில் எம்.எஸ்.நகர் அருகில் சாலையின் வளைவு பகுதியில் பெரிய குழி ஒன்றுள்ளது. வாகன ஓட்டிகள் குழியில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

-பிரபு, திருப்பூர்.

மேலும் செய்திகள்