சாலையோரம் ஆபத்தான குழி

Update: 2023-01-29 16:42 GMT

சாலையோரம் ஆபத்தான குழி

திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாமல் உள்ளது. இதன் அருகே எந்தவித பாதுகாப்பு தடுப்பும் வைக்கப்படாமல் உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் முதல் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

 இரவு நேரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள குழியில் வாகனங்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சுரேஷ், திருப்பூர்.

மேலும் செய்திகள்