இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-04-09 19:23 GMT

இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர் குமரன் ரோடு வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. குமரன் ரோடும் கோர்ட்டு வீதியும் சந்திக்கும் இடத்தில் தார்ரோட்டில் ஒரு பெரிய குழி உள்ளது. குமரன் ரோட்டில் வரும் இருசக்கர வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச்செல்லும் போது இந்த குழியில் இறங்கி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பெண்கள், குழந்தைகளுடன் வரும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. விபத்து காரணமாக வாகனங்கள் பழுதடைவதுடன் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன்பாக அந்த குழியை மூடி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-வின்சென்ட்ராஜ் திருப்பூர்.

மேலும் செய்திகள்