குண்டு குழியுமான சாலை

Update: 2024-01-21 10:49 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி பஜார் வீதியில் போடப்பட்ட சிமெண்டு சாலைகள் பல இடங்களில் குண்டு குழியுமாகவும், மிகப் பெரிய பள்ளங்களாவும் ஏறபட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-ரஞ்ஜித்குமார், போளூர். 

மேலும் செய்திகள்