திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா ராண்டபுரம் கிராமத்தில் பெரிய தெரு சாலையில் பெரிய பள்ளங்கள் உள்ளன. மழைப் பெய்யும்போது அதில் தண்ணீர் தேங்குவதால் அந்த வழியாக வாகனங்களில் வருவோர் பள்ளத்தில் விழுந்து செல்கிறார்கள். பள்ளத்தை சிமெண்டு கலவை அல்லது தார் கலவையால் மூடி சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-காசிநாதன், ராண்டபுரம்.