சேதமடைந்த சாலை

Update: 2026-03-01 15:48 GMT

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலைகளில் அன்றாடம் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். சேதமடைந்த சாலையால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்