நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-03-22 13:44 GMT

வேலூர் மாநகராட்சி மண்டலம் 2-வது சத்துவாச்சாரியை அடுத்த வள்ளலார் பகுதியில் பள்ளி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குறுகிய சர்வீஸ் சாலைக்கு அருகே சிறு வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவர்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தி பொது மக்கள் பயன்பாட்டுககு வசதி செய்து தர வேண்டும்.

-லயன் ஆர்.குப்புராஜ், வேலூர்.

மேலும் செய்திகள்