ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அன்றாட பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் நிலைத்தடுமாறி கீழே விழுந்து சிறு சிறு காயங்களும் ஏற்பட்டு வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து கிடக்கும் சாலைகளை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பாா்களா?