சேதமடைந்த சாலை

Update: 2026-09-13 09:06 GMT

புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி தெற்கு தெருவில் உள்ள பிரதான சாலைகள் பல காலமாக எந்தவித பராமரிப்புமின்றி முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினசரி கடும் அவதிக்குள்ளாகின்றனர். சேதமடைந்துள்ள சாலை மற்றும் கழிவுநீர் பாலத்தால் மழைக்காலங்களில் தேங்கும் நீருக்குள் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுவதுடன், பள்ளி செல்லும் மாணவர்களும், முதியவர்களும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்