பொதுமக்கள் அவதி

Update: 2026-08-30 13:38 GMT

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முக நகர் தெற்கு 11-வது கிராஸ் பகுதியில் சாலை மேடு, பள்ளமாக உள்ளதுடன், மழைக்காலங்களில் தேங்கும் நீரும் பல நாட்களாக வடிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருவதுடன், அப்பகுதியில் உள்ள காலி மனைகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்களாலும், தெருவிளக்குகள் எரியாததாலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைத்து தார்சாலை அமைப்பதோடு கருவேல மரங்களை அகற்றவும், எரியாத தெருவிளக்குகளை சரிசெய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்