சேதமடைந்த சாலை

Update: 2026-08-30 13:07 GMT

சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் பாளையம் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் முழுவதும் சாலையை ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் தேங்கிய கழிவுநீரால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாய் மற்றும் சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்