ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ராதானூர் ஊராட்சி மேடாகோட்டை கிராமத்துக்கு செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் இச்சாலையில் பயணிக்க வாகனஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.