திருச்சி மாநகராட்சி 48-வது வார்டுக்கு உட்பட்ட ராஜா தெருவில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பாராதவிதமாக சாக்கடைக்குள் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில் சேதமடைந்த சாக்கடை மூடியை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.