பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிவாசல் தெரு மற்றும் சிவாஜி தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய கான்கிரீட் சாலைகள் தரமற்று குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் பயணிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.