சேதமடைந்த வழிகாட்டி பலகை

Update: 2026-08-23 16:02 GMT
நெல்லை மாவட்டம் ராதாபுரம்- விஜயாபதி சாலையில் கூடங்குளம் விலக்கில் நான்கு புறமும் ரோடு சந்திக்கும் இடத்தில் இருந்த வழிகாட்டி பலகை முழுமையாக உடைந்துள்ளது. இதனால் புதிதாக அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பிட்ட சாலைகள் எங்கே செல்கிறது என்று தெரிவதில் சிரமம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிகாட்டி பலகையை புதிதாக அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்