ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நான்கு வழிச்சாலை அருகில் உள்ள செந்தமிழ் நகர் 3-வது தெரு பகுதி சாலைகள் பராமரிப்பின்றி கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய தார்ச்சாலை அமைத்து தருவார்களா?