வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனி பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக கடந்து செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆதலால் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?