கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோயில் மேம்பாலம் கீழ் முதல் எஸ்.பி. காலனி வரை தார்சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே கிடப்பில் உள்ள சாலை அகலப்படுத்தும் பணியை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.