அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் குணமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து அரியலூர் செல்லும் பாதையில் ஏரியை ஒட்டி செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் எதிரெதிரே பஸ்கள் வரும்போது ஒதுங்கி செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில் இந்த சாலையை விரைவாக அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.