சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் டவுன் மற்றும் ஊரகபகுதிகளில் சேரும் குப்பைகள் உரிய முறையில் மறுசுழற்சி மையங்களுக்கு கொண்டு செல்லப்படாமல், சாலையோரங்களிலேயே கொட்டப்படும் அவலம் தொடர்ந்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் முக்கிய சந்திப்புகளில் குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இந்த குப்பை கழிவுகளில் கொட்டப்படும் உணவு பொருட்களை தின்பதற்காக தெருநாய்கள், மாடுகள் வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், தெருநாய்களை கட்டுப்படுத்தலாமே!