பெரம்பலூரில் இருந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அதே அகலத்தில்தான் தற்போதும் சாலை உள்ளது. இச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் பல நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பெரம்பலூர் - ஆத்தூர் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.