பர்கூர் ஜெகதேவி ரோட்டில் அச்சமங்கலம் மற்றும் கொண்டப்பநாயனப்பள்ளி 4 சாலைகள் இணைந்த கூட்ரோடு பகுதி உள்ளது. இந்த கூட்ரோடு பகுதியை சுற்றிலும் 10-க்கு மேற்பட்ட கிராம பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் இங்கு வந்து தான் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த கூட்ரோடு பகுதியில் அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் காலதாமதம் இன்றி வேகத்தடை அமைக்க வேண்டும்.