சென்னை பழவந்தாங்கல் ரெயில்வே நிலையில் அருகே உள்ள சுரங்க பாதைக்கு அருகில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். அந்த பள்ளியின் முன்பு உள்ள சாலை சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் முறையாக சாலை போடமால் குழியை மட்டும் மூடியுள்ளனர். இதனால் அந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.