அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் இருந்து முத்துசேர்வாமடம் செல்லும் சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் இருந்து அரசு பள்ளிக்கு செல்லும் பாதையில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில், தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இந்த பள்ளிக்கு செல்லும் மாணவிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.