ஈரோடு பழையபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை மாநகராட்சி ஊழியர்கள் சரிசெய்தனர். ஆனால் அந்த குழியை சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் அந்த சாலை குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.