குழி மூடப்படுமா?

Update: 2026-05-31 18:09 GMT

 பவானி வர்ணபுரத்தில் இருந்து சொக்காரம்மன் நகர் செல்லும் பாதையில் குடிநீர் குழாய் சீரமைப்புக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. ஆனால் குழாய் சீரமைக்கப்படவில்லை. எந்த பணிகளும் நடக்கவில்லை. கடந்த சில நாட்களாக இரவில் அந்த பகுதியில் மின்வெட்டு இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழுந்துவிட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்