பர்கூர்-திருப்பத்தூர் சாலையில் பர்கூர் தாலுகா அலுவலகம் எதிரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் சாலையோரம் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழைநீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இந்த இடத்தை கடந்து செல்ல மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி உள்ளதால் சாலையும் சிதிலமடைய வாய்ப்புள்ளது. எனவே காலதாமதம் இன்றி நெடுஞ்சாலை துறையினர் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.