செங்கல்பட்டு மாவட்டம், பேரமனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் இருபுறமும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சில சமயங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.