ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் 10 வது வார்டில் புதிய சாலை அமைப்பதற்காக செம்மண் கொட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை புதிய சாலை பணி தொடங்கவில்லை. இதனால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் அவ்வப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் புதிய சாலை அமைக்க முன்வருமா?