நாமக்கல் மாவட்டம் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் இருப்பதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் பலர் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.