அரியலூர் மாவட்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள கங்கவடங்கநல்லூரில் இருந்து காட்டுக்கொல்லை மெயின் ரோடு வரை உள்ள தார்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த சாலையில் மழைநீர் தேங்கி மேடு, பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.