அரியலூர் நகராட்சி சார்பில் விளாங்காரத் தெருவில் நெடுஞ்சாலை ஓரத்தில் கழிவறை கட்டிடம் கட்டும்பணி தொடங்கியுள்ளது. அந்த இடத்தில் சாலை இசட் வடிவில் உள்ளதால், கனரக வாகனங்கள் வரும் போது கழிவறை கட்டிடத்தின் மீது உரசி செல்லும் நிலை உள்ளது. மேலும் மழைநீர் செல்லும் பாதையை மரித்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. இந்த வழியாக அரசு கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் சென்று வருகின்றனர். தற்போது கட்டப்படும் கழிவறை கட்டிடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.