அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் தற்போது சாலை அகலப்படுத்தும் பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.