தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தனியார் மருத்துவமனை அருகே, பஸ் நிலையம் நுழையும் இடங்கள், பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் போலீஸ் நிலையம் அருகே, கடைவீதி வழி ஆகிய இடங்களில் வேகத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், தொழிலாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.