சாலையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்

Update: 2026-03-01 11:07 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் முதல் மரவாபாளையம், முத்தனூர், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வழியாக வாங்கல் வரை புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் இடது கரையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண்சாலையும், சில இடங்களில் தார்சாலையும் அமைக்கப்பட்டது. இந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் சாலையோரம் ஏராளமான நாணல், செடி, கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அனைத்து வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்