புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து வேகுபட்டி செல்லும் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. இந்த சாலையில் மாம்பலத்தான் ஊரணி அருகே தனியார் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் பொன்னமராவதில் இருந்து திருமயம் செல்ல இது முக்கிய சாலையாக இருப்பதால், இந்த சாலையை அதிகளவிலான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் மாம்பலத்தான் ஊரணி பகுதியில் வேகத்தடை இல்லாததால், அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.