தர்மபுரி புதிய புறநகர் பஸ் நிலையம் திறக்கப்பட்டு இருப்பதால் குமாரசாமிப்பேட்டை மேம்பாலம் வழியாக சென்று வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேம்பாலத்தில் உள்ள சில மின்விளக்குகள் மங்கலாக எரிகின்றன. பல மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் இந்த மேம்பாலம் போதிய வெளிச்சமின்றி காணப்படுகிறது. எனவே இங்குள்ள மின்விளக்குகளை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.