நாகர்கோவில்-கன்னியாகுமரி நெஞ்சாலையில் மகாதானபுரம் ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானா அருகில் உள்ள சர்வீஸ் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆடுகள் கூட்டமாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் ஆடுகள் நான்கு வழிச்சாலையின் குறுக்கே அடிக்கடி பாய்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் ஆடுகள் நடமாட்டத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.