உயிரிழப்பு ஏற்படும் அபாயம்

Update: 2026-02-01 13:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் குப்பையன்பட்டி சம்பட்டிவிடுதி வழியாக ஆலங்குடி செல்லும் சாலையும், வத்தனாக்கோட்டை குன்றாண்டார்கோவில் வழியாக கீரனூர் செல்லும் சாலையும் சந்திக்கும் நால்ரோடு சாலை சந்திப்பு உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் மீது வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் நடக்கின்றது. மேலும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் பேரிகார்டு வைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி