சேலம் 52-வது வார்டு சண்முகம் நகர் பகுதியில் சாலையில் திடீரென குழி ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி வேன், ஆட்டோக்கள், கார்கள், கனரக வாகனங்கள் சிரமத்தோடு செல்கின்றன. இரவு நேரத்தில் சிலர் அதில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையில் உள்ள குழியை மண் கொட்டி சீரமைக்க வேண்டும்.