புதுச்சேரி - கடலூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வணிக வளாகம் எதிரே உள்ள சாலையில் மண் குவிந்து கிடக்கிறது. இதில் இருசக்கர வாகனங்களின் சக்கரம் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தேங்கியுள்ள மண்ணை அகற்ற வேண்டும்.