ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளியிலிருந்து காணிக்காடு செல்லும் பிரதான சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் தார்சாலை காணாமல் போய், சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா?